Wednesday, July 21, 2010

முடியாது முடியாது பதவி விலக முடியாது.மம்தா அடம்

கோல்கட்டா : ரயில் விபத்து காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் சயிந்தியாவில் இரண்டு ரயில்கள் மோதி கொண்ட விபத்தில் 66 பேர் பலியானர்கள். இதன் காரணமாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ரயில்வேத்துறை அமைச்சர் மம்தா தனது பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது : இந்த ரயில் விபத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சதி வேலையாக இருக்கலாம் என்றும், இந்த விபத்துக்கள் சதி என்று நிருபிக்கப்பட்டால் தனது பதவியை ராஜினாமா செய்யத்தயார் என்றும் கூறினார். மேலும் அவர், இந்த ரயில் விபத்துக்கு சதி காரணம் என்றும், மார்க்சிஸ்ட் கட்சியினர் தான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஞானேஸ்வரி ரயில் விபத்தும், சயிந்தியா ரயில் விபத்தும் அதிகாலை 2 மணிக்கு தான் நடந்துள்ளதாகவும், இது விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment